close
Choose your channels

அதை நான் காதால கேட்டேன்.. அஜித்தின் ரகசியத்தை வெளியிட்ட நடிகை அம்பிகா..!

Sunday, October 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் குறித்து இதுவரை வெளிவராத ரகசியம் ஒன்றை நடிகை அம்பிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அஜித் பலருக்கு சத்தமே இல்லாமல் உதவி செய்துள்ளார் என்பதும் அவர் பலருடைய அறுவை சிகிச்சைகளுக்கு பணம் கொடுத்துள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகை அம்பிகா சமீபத்தில் நடந்த பேட்டியில் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அஜித்தின் புகைப்படத்தை காட்டி இவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது ’நான் அஜித்துடன் ‘உயிரோடு உயிராக’ ’அமர்க்களம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளேன். அஜித் - ஷாலினி லவ் ஸ்டார்ட் ஆனது ’அமர்க்களம்’ படத்தின் போது தான். ரொம்ப நல்ல மனிதர்.

’அமர்க்களம்’ படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு குழந்தை மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தது. அந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டது என்பதை செய்தித்தாளில் பார்த்த உடனே தன்னுடைய ஆபீசுக்கு போன் செய்து, இந்த தொகையை இந்த ஆஸ்பத்திரியில் கொடுத்து விடுங்கள் என்று கூறியதை நான் என்னுடைய காதால கேட்டேன். எனவே பெரிய உள்ளம் படைத்தவர் அஜித்.

மேலும் அவர் சிரித்தால் ரொம்ப அழகாக இருக்கும். அஜித் நீங்கள் இப்படியே இருங்கள் என்று அம்பிகா கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment