அதை நான் காதால கேட்டேன்.. அஜித்தின் ரகசியத்தை வெளியிட்ட நடிகை அம்பிகா..!

  • IndiaGlitz, [Sunday,October 15 2023]

அஜித் குறித்து இதுவரை வெளிவராத ரகசியம் ஒன்றை நடிகை அம்பிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அஜித் பலருக்கு சத்தமே இல்லாமல் உதவி செய்துள்ளார் என்பதும் அவர் பலருடைய அறுவை சிகிச்சைகளுக்கு பணம் கொடுத்துள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகை அம்பிகா சமீபத்தில் நடந்த பேட்டியில் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அஜித்தின் புகைப்படத்தை காட்டி இவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது ’நான் அஜித்துடன் ‘உயிரோடு உயிராக’ ’அமர்க்களம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளேன். அஜித் - ஷாலினி லவ் ஸ்டார்ட் ஆனது ’அமர்க்களம்’ படத்தின் போது தான். ரொம்ப நல்ல மனிதர்.

’அமர்க்களம்’ படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு குழந்தை மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தது. அந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டது என்பதை செய்தித்தாளில் பார்த்த உடனே தன்னுடைய ஆபீசுக்கு போன் செய்து, இந்த தொகையை இந்த ஆஸ்பத்திரியில் கொடுத்து விடுங்கள் என்று கூறியதை நான் என்னுடைய காதால கேட்டேன். எனவே பெரிய உள்ளம் படைத்தவர் அஜித்.

மேலும் அவர் சிரித்தால் ரொம்ப அழகாக இருக்கும். அஜித் நீங்கள் இப்படியே இருங்கள் என்று அம்பிகா கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

வெளிய போய் நம்பர் குடுடா.. நிக்சனிடம் கேட்ட பெண் போட்டியாளர்..!

 ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் மணி மற்றும் ரவீனா ரொமான்ஸ் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு ரொமான்ஸ் ஜோடி ஆரம்பமாகுமோ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளியின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் விஷால்.. மாணவ மாணவிகள் நன்றி..!

அரசு பள்ளியின் கோரிக்கையை ஏற்று நடிகர் விஷால் அரசு பள்ளிக்கு ஆண்ட்ராய்டு டிவி வாங்கி கொடுத்த நிலையில், அந்த பள்ளியின் மாணவ மாணவிகள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.

தீபாவளி ரிலீஸ் திரைப்படத்தை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட் மூவீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

வரும் தீபாவளி திருநாளில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' மற்றும் கார்த்தி நடித்த 'ஜப்பான்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பது தற்போதைக்கு உறுதி

ஒரு டிக்கெட் கூட கவுண்டரில் இல்லை.. 4 நாட்களுக்கு ஹவுஸ்புல்.. விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்..!

சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் கவுண்டரில் ஒரு டிக்கெட் கூட கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு சில நிமிடங்களில் நான்கு நாட்களுக்கு உரிய 'லியோ' படத்தின் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக

'இரும்புக்கை மாயாவி' சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை அல்ல.. லோகேஷ் கனகராஜ் ஆச்சரிய தகவல்..!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா, இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும், ஒன்று 'ரோலக்ஸ்' மற்றொன்று 'இரும்புக்கை மாயாவி' என்றும் கூறப்பட்டது.