வரி ஏய்ப்பு விவகாரம் நடிகை அமலாபால் கைதாகி விடுதலை

  • IndiaGlitz, [Monday,January 29 2018]

சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் நடிகை அமலாபால், கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கேரளாவை இருப்பிடமாக கொண்ட அமலாபால், சொகுசுக்கார் ஒன்றை வாங்கும்போது கேரளாவில் பதிவு செய்யாமல், வரி ஏய்ப்பு செய்ய புதுச்சேரியில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் சுமார் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது கேரள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாபாலுக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது. இதன்படி ஆஜரான அமலாபாலை கேரள போலீசார் கைது செய்ததாகவும் பின்னர், கேரள உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமினை அடிப்படையாக கொண்டு அவர்கள் உடனே விடுதலை செய்ததாகவும் கேரள போலீசாரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இதே போன்ற வழக்கில் மலையாள நடிகர்கள் சுரேஷ்கோபி, பஹத் பாசில் ஆகியோரும் கைதாகி விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உலகப்புகழ் பெற்ற கோல்டன் கோவிலில் நயன்தாரா

உலகப்புகழ் பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலில் நயன்தாரா சென்று வழிபட்டுள்ளார். கருப்பு நிற உடையில் தலையில் முக்காடு போட்டு அவர் பொற்கோவில் முன் நிற்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஹிட் தமிழ் ரீமேக் படத்தில் அக்சய்குமார்?

தமிழில் சூப்பர் ஹிட் ஆகி வரும் படங்கள் இந்தியிலும் ரீமேக் ஆகி வரும் நிலையில் தற்போது தமிழில் சூப்பர் ஹிட் ஆனதோடு, ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்த 'காஞ்சனா 2' திரைப்படமும் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

சமுத்திரக்கனியின் 'ஏமாலி' திரைமுன்னோட்டம்

ஏமாளி' என்ற தலைப்பிற்கு பதிலாக 'ஏமாலி' என்ற தலைப்பு வைத்துள்ளது குறித்து பலர் தன்னிடம் விளக்கம் கேட்டதாகவும், அதற்கான பதில் படத்தில் இருப்பதாகவும் இயக்குனர் துரை கூறியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்காதவர்களை நாட்டை விட்டு அனுப்பலாமா? கரு.பழனியப்பன்

எவன் எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க மாட்டானோ, அவனையெல்லாம் நாட்டை விட்டு அனுப்பிவிடுவோமா?

ஆண்டவன் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நமக்கு ஆண்டவன் கொடுத்த இந்த நல்ல வாய்ப்பை சரியாக பயன்படுத்தி