'காஞ்சனா 3' படத்தில் நடித்த நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Sunday,August 22 2021]

பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா 3’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா 3’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்ஸாண்ட்ரா ஜாவி என நான்கு நாயகிகள் நடித்து இருந்தனர். இதில் அலெக்சாண்டிரியா ஜாவி என்பவர் ரோஸி எனும் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் இந்த கேரக்டரில் நடித்த அவருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஜாவி தனது காதலருடன் கோவாவில் தங்கியிருந்த நிலையில் திடீரென காதலர் இவரை விட்டு பிரிந்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் திடீரென நேற்று இரவு அவர் தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து காவல்துறையினர் அவருடைய பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

’காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது

கமல்ஹாசன் எழுதி வரும் ஸ்கிரிப்ட் யாருக்காக? அவரே அளித்த பதில்!

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வருவதாகவும், இந்த ஸ்கிரிப்ட் பிரபல மலையாள இயக்குனர் ஒருவருக்காக எழுதி வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சென்னை என்னுடைய நண்பன்: விஜய்சேதுபதி வீடியோ வைரல்!

இன்று சென்னையின் 382ஆவது தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மக்கள் சென்னையின் பெருமை குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் அமலாபால் வேடத்தில் தமிழ் நடிகை?

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'ராட்சசன்'. இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் ராக்ஷசுடு என்ற டைட்டிலில்

'பீஸ்ட்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நகரத்திலா? 

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது என்பது தெரிந்ததே.