வொண்டர்வுமனை அறிமுகம் செய்த தமிழ் நடிகை: அப்படி என்ன செய்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,August 07 2021]

’காதலில் சொதப்புவது எப்படி’ ’தீயா வேலை செய்யணும் குமாரு’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா மேனன், வொண்டர்வுமன் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் செய்த சாதனை என்ன என்பதை பார்ப்போம்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராஜேஸ்வரி என்ற பெண்ணை அவர் அறிமுகம் செய்து இவர்தான் வொண்டர்வுமன் என்று கூறியுள்ளார். ராஜேஸ்வரி தினமும் 80 நாய்களுக்கு உணவு அளித்து வருவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இதை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய புன்னகை மிகவும் அழகாக இருப்பதாகவும் அவருடைய உள்ளமும் மிகவும் அழகாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்து வரும் சேவைக்கு ஒரு பெரிய சல்யூட் என்றும் ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களாக தான் தினமும் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருவதாகவும் ஒருநாள்கூட உணவளிக்காமல் இருந்ததில்லை என்றும் ராஜேஸ்வரி அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் உண்மையிலேயே அவர் வொண்டர்வுமன் தான் என்று தெரிவித்து வருகின்றனர்.

More News

மேலும் ஒரு தமிழ்ப்படத்தில் பூஜா ஹெக்டே: அவரே கூறிய தகவல்!

கடந்த 2012ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' என்ற திரைப்படத்தில் நடிகை பூஜாவுக்கு அறிமுகமானாலும் அதன் பின்னர் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிஸியானார்.

விஜய் பட நாயகிக்கு 28ஆவது பிறந்தநாள்… நெட்டிசன்களே வியக்கும்  வைரல் பிக்ஸ்!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “மாஸ்டர்”

படு ஸ்லிம் ஆகிவிட்ட நடிகை குஷ்பு… திடீர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா?

“தர்பார்“ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் சிறுத்தை சிவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “அண்ணாத்த” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

பதக்கத்தை தவறவிட்ட… ஹாக்கி வீராங்கனைகளுக்கு ஜார்கண்ட் கொடுக்கும் அசத்தலான பரிசு!

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறினர்.

'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் இதுவா? வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது 'டான்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி