21 வயதில் அட்ஜெஸ்ட்மெண்ட்.. நடிகையின் குற்றச்சாட்டால் பதவி விலகிய பிரபல நடிகர்..!

  • IndiaGlitz, [Monday,August 26 2024]

மலையாள திரை உலகை சேர்ந்த நடிகை ஒருவர் தன்னை 21 வயதில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கட்டாயப்படுத்தியதாக நடிகர் ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறிய நிலையில் அந்த நடிகர், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து மாநில அரசு ஹேமா கமிஷன் ஒன்றை அமைத்தது. இந்த கமிஷன் பல நடிகர், நடிகைகளிடம் விசாரணை செய்த நிலையில் சமீபத்தில் முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அந்த அறிக்கையில் பல நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரபல மலையாள நடிகை ரேவதி சம்பத் என்பவர் கேரள மாநில திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு தன்னை வர சொன்னதாகவும் தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் அப்போது தனக்கு 21 வயது என்றும் ஒரு மணி நேரம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டியதாகவும் நடிகை ரேவதி கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகர் சித்திக், கேரள நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்து உள்ள நிலையில் அவர் மீது காவல்துறை நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

அண்டை மாநிலங்களில் அதிகாலை காட்சி.. தமிழகத்தில் 'கோட்' சிறப்பு காட்சி உண்டா?

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் இந்த படத்திற்கு அதிகாலை காட்சி அல்லது சிறப்பு

தமிழக அரசியலுக்கு வருகிறாரா நடிகை ரோஜா? விஜய் கட்சியில் இணைய பேச்சுவார்த்தையா?

கடந்த பல ஆண்டுகளாக நடிகை ரோஜா ஆந்திர அரசியலில் இருக்கும் நிலையில் அவர் தமிழக அரசியலுக்கு வரப்போவதாகவும் குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில்

இன்ஸ்டாவில் காதல்.. காதலனை நம்பி காட்டுக்குள் போன இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர், இளைஞரை காதலித்த நிலையில் அந்த இளைஞரை நம்பி காட்டுக்குள் போன இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் காரணமாக பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை சர்ச்சை.. சிக்கிய பிரபல தமிழ் நடிகர்..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக ஹேமா கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ள நிலையில் பல நடிகைகள் தற்போது தைரியமாக

எனது அடுத்த படம் இந்த ஹீரோவுடன் தான்.. ஆனால் இப்போதைக்கு இல்லை..! வெங்கட் பிரபு

தளபதி விஜய் நடிப்பில் உருவான 'கோட்' திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ள நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது