பல்சர் சுனில் ஏற்கனவே இன்னொரு நடிகையை கடத்தியவரா? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

பிரபல மலையாள நடிகை கடந்த சில மாதங்களுக்கு முன் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாக பல்சர் சுனில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வரும் கேரள போலிசார் கடந்த 2011ஆம் ஆண்டும் இதே போல ஒரு பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் ஜானி சர்க்காரியா என்பவரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் தன்னுடைய படத்தில் நடித்த ஒரு நடிகையை பல்சர் சுனில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஆனால் அந்த நடிகை பயந்து கொண்டு போலீசில் புகார் செய்ய மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இன்னொரு பிரபல நடிகையை கடத்தியதாக பல்சர் சுனில் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து அவரை மீண்டும் கைது செய்யவுள்ளதாகவும், இந்த குற்றத்தில் வேறு நடிகர் யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.