ரஜினியை அடுத்து பாபாஜி குகையில் தியானம் செய்த தமிழ் நடிகை. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,September 24 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது இமயமலை சென்று பாபாஜி குகையில் தியானம் செய்வார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் என்பது தெரிந்ததே. இதையடுத்து தற்போது தமிழ் நடிகை ஒருவரும் பாபாஜி குகையில் தியானம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இதனை அடுத்து அவர் ’கோடியில் ஒருவன்’ ’காட்டேரி’ ’கண்ணை நம்பாதே’ ’திருவின் குரல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகாவுக்கு இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இவர் சற்றுமுன் இமயமலையில் உள்ள பாபாஜியின் குகையில் தியானம் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த பயணம் ஆன்மாவின் அழைப்பு என்று கருதப்படுகிறது, ஒரு தெய்வீக அழைப்பு வந்தது, சிறிதும் யோசிக்காமல் நான் சென்றடைந்தேன். இது ஒரு கடினமான பயணமாகவும், மரண அனுபவத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தாலும் நல்ல விஷயங்கள் எளிதில் வராது.

நான் பாபாஜி குகையில் நுழைந்து தியானத்திற்கு உட்காரும்போது அந்த தியானம் ஆழமானதாக ஆரம்பிக்கப்பட்டது. என் வாழ்நாளில் இதற்கு முன் இதுபோன்ற சக்தியை நான் அனுபவித்ததில்லை. இந்த தியானத்திற்கு பிறகு எனது முழு பார்வையும் மாறியது. நிபந்தனை இன்றி அவரை நான் குருவாக ஏற்றுக் கொண்டேன்.இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அவர்கள் எங்கிருந்தாலும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பாபாஜி குகைக்கு வந்து தியானம் செய்து அதன் அனுபவத்தை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நடிகை ஆத்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

More News

'8 தோட்டாக்கள்' இயக்குனரின் அடுத்த படம்.. மீண்டும் க்ரைம் த்ரில்லர் படமா?

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீ கணேஷ் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்கிய '8 தோட்டாக்கள்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வெற்றி, அபர்ணா பாலமுரளி

'சந்திரமுகி 2' படத்தின் 450 ஷாட்களை காணவில்லை. பி வாசு கூறிய அதிர்ச்சி தகவல்..!

'சந்திரமுகி 2' படத்தின் ரிலீசுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் 450 ஷாட்களை காணவில்லை என இயக்குனர் பி வாசு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமந்தாவின் 'குஷி': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் தேவரகொண்டவுடன் சமந்தா நடித்த 'குஷி' திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது

பாட்டு இல்லை, ரொமான்ஸ் இல்லை.. ரஜினிக்கு முன் ஜெயிலர்' படத்தை ரிஜக்ட் செய்த பிரபலம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. 

நானும் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன்: கமல்ஹாசன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

20 வயதில் நானும் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன் என உலகநாயகன் கமல்ஹாசன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.