'ஜெயிலர் 2' படத்தில் நான் நடிக்கிறேன்.. முதல் பாகத்தில் நடித்த பிரபல நடிகர் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,July 30 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ’ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் யோகி பாபு இந்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

’ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரஜினியுடன் சில காட்சிகள் காமெடியாக நடித்திருந்த யோகி பாபு, இரண்டாம் பாகத்திலும் தான் நடிக்க இருப்பதாகவும் முதல் பாகம் போலவே இந்த பாகத்திலும் தனக்கு நகைச்சுவை காட்சிகள் இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ’ஜெயிலர் 2’ படத்தின் கதை முதல் பாகத்தின் முந்தைய கதையா? அல்லது தொடர்ச்சியான இரண்டாம் பாகமா? என்பதை கூற அவர் மறுத்து விட்டார். மேலும் இந்த படம் குறித்த அறிவிப்பை இயக்குனர் நெல்சன் அல்லது தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது இயக்குனர் நெல்சன் ’ஜெயிலர் 2’ திரைக்கதையை எழுதி வருவதாக யோகி பாபு உறுதி செய்த நிலையில் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

அட்லியின் அடுத்த படத்தில் சல்மான்கானும் இல்லை, கமல்ஹாசனும் இல்லை.. இந்த தமிழ் நடிகரா?

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த 'ஜவான்' திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாகியும் அட்லியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தனுஷ் மீது நடவடிக்கையா? நடிகர் சங்கம் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தனுஷை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் கலந்து ஆலோசித்து அதன் பின் படம் தயாரிக்க வேண்டும்

பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள்: நிலச்சரிவு குறித்து கமல்ஹாசன்..!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் 70-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படும்

நவகிரக தோஷம், பித்ரு தோஷம், திருமண தடை நீங்க எளிய பரிகாரங்கள்

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் பிரபல ஜோதிடர் ஜெய் ஸ்ரீ ராம் ரெங்கநாதன் அவர்கள் கலந்து கொண்ட பேட்டி வெளியாகியுள்ளது. இந்த பேட்டியில் நவகிரக தோஷம், களத்திர தோஷம்,

யூடியூபர் பிரியாணிமேன் கைது ஏன்? காவல்துறை விளக்கம்..!

யூடியூபர் பிரியாணி மேன் என்ற அபிஷேக் ரபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து காவல்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது: