காவிரி தாயுடன் பிரபல நடிகர் உரையாடிய கவிதை

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க  வேண்டும் என்பதற்காக 25 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு பின் கிடைத்த தீர்ப்பையும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்பதை கண்டித்து கடந்த சில நாட்களாக தமிழக மக்கள் தெருவுக்கு வந்து போராடி வருகின்றனர். காவிரி தண்ணீர் இல்லையென்றால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்றும், தமிழக மக்களின் குடிநீர்த்தேவைக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதால் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில் காவிரி தாயுடன் உரையாடுவது போன்று நடிகர் விவேக் ஒரு கவிதை எழுதி அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதோ:

நான்: காவிரித் தாயே! காவிரி தாயே!
கன்னட மண்ணில் பூ விரித்தாயே! - ஏன்
தமிழ்மகன் கேட்டால் கை விரித்தாயே?

காவிரி: முத்து மகனே! முட்டாள் மகனே!
கைவிட்டது நானா நீயா?;
செழித்துப் பாய்ந்தேன்; நீ சேமித்தாயா?
ஆழியில் கலக்கும்முன் அணை செய்தாயா?

நான்: இனி நான் என்ன செய்ய? சொல்வாயா?

காவிரி: சினிமா பார்த்து சிரி
கிரிக்கட், பாப்கார்ன் கொறி!
மழுங்கி போனதே உன் வெறி

நான்: தாயே என்னை மன்னிப்பாயா?

காவிரி: எழுந்து நில்! தயக்கம் கொல்!
இரைப்பை நிரப்புவது கலப்பை!
இதை உணராதவன் வெறும் தோல் பை
நான் உனக்கும் அன்னை
கன்னடர் உந்தன் உடன் பிறப்பு
காவிரியும் உனது நீர்ப் பரப்பு
இதை உரக்கச் சொல்; உன் உரிமை சொல்

More News

ஸ்டைலா கெத்தா திரும்பி வந்த சிஎஸ்கே!

மஞ்சர் படை வீரர்கள் சேப்பாக்கத்தில் அணிவகுத்து 1000 நாட்களுக்கு மேலாகிவிட்டது.

காவலர் தாக்கப்பட்ட விவகாரம்: சீமான் மீது கொலை முயற்சி வழக்கு

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவருடைய கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

காமன்வெல்த் 2018: இந்தியாவுக்கு 12வது தங்கப்பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் இந்தியா ஏற்கனவே 11 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை பெற்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளை அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஜடேஜா குறித்து அன்றே சொன்னார் தோனி

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை வென்றது.

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தார் அமைச்சர் ஜெயகுமார்

ஐபிஎல் போட்டிக்கு எதிரான அரசியல் கட்சிகளின் போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.