நடிகர் விமல் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம்: ஒரு வயது க்யூட் குழந்தை!

  • IndiaGlitz, [Friday,June 04 2021]

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விமல். அதன்பின்னர் களவாணி, தூங்காநகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விமல் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் பிறந்த நடிகர் விமலின் பெண் குழந்தை ஆத்விகாவுக்கு இன்று ஒரு வயது முடிவடைந்ததை அடுத்து அதனை விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. விமலின் ஒரு வயது குழந்தை ஆத்விகாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விமல் தற்போது ’சண்டக்காரி’ ’எங்க பாட்டன் சொத்து’ ’மஞ்சள் குடை’ ’குல சாமி’ படவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

More News

கோவின் இணையதளம்... புறக்கணிக்கப்பட்ட தமிழ்மொழி... தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்...!

கொரோனா தடுப்பூசி  பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் மத்திய அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படத்தில் 4 ஹீரோயின்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏஎல் விஜய் இயக்கி முடித்துள்ள 'தலைவி' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வருக்கு தாழ்வான வேண்டுகோள் விடுத்த இயக்குனர் சேரன்!

சமீபத்தில் தமிழக முதல்வராக பதவி ஏற்ற முக ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் சேரன் தாழ்வான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் 

நாகேஷுடன் நடித்த காட்சி: மலரும் நினைவுகளை பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் 

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அவர் இயக்கிய 'ஏழாம் அறிவு' 'துப்பாக்கி' 'கத்தி'

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஜுன் 7 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீடிக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்து இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.