கெத்தா நம் கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம்.. கொடியேற்றும் விழாவில் விஜய் பேச்சு..!

  • IndiaGlitz, [Thursday,August 22 2024]

தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம். சந்தோஷமா, கெத்தா நம் கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம். எல்லோரும் நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என இன்று நடைபெற்ற தவெக கட்சி கொடி அறிமுக விழாவில் தளபதி விஜய் பேசினார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடி இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கொடியில் இரண்டு வண்ணங்கள், இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை மலர் உள்ளன. இந்த கொடியை இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றிய பின் விஜய் பேசியதாவது:

கொடியின் இடம் பெற்றுள்ள படங்களின் விளக்கத்தை முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்கிறேன். முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இவ்வளவு நாள் நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம். தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம். சந்தோஷமா, கெத்தா நம் கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம்.

இது கட்சிக்கொடி அல்ல. வருங்கால தலைமுறையினருக்கான வெற்றிக்கொடி. முறையாக அனுமதி பெற்று, தொண்டர்கள் அவரவர் இல்லத்தில் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும். அனைவரிடமும் தோழமை பாராட்டி உரிய அனுமதி பெற்று கொடியை ஏற்றி கொண்டாடுங்கள். எல்லோரும் நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

More News

ஆணுறை வாங்கி வர முடியாது என்றதால் படத்தில் இருந்து நீக்கம்.. தமிழ் ஹீரோ மீது உதவி இயக்குனரின் குற்றச்சாட்டு..!

தமிழ் திரையுலகின் ஹீரோ ஒருவர் ஆணுறை வாங்கி வரச் சொன்னதாகவும், முடியாது என்று சொன்னதால் தன்னை படத்திலிருந்து தூக்கி விட்டதாகவும், உதவி இயக்குனர் ஒருவர்

மாரி செல்வராஜின் 'வாழை' படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் விமர்சனம்.. என்ன சொல்லி இருக்கிறார்?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில்

இன்று கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்..  அதற்கு முன் தவெகவின் உறுதிமொழி..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் கொடி இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

'படுக்கைக்கு அழைத்தவரை செருப்பால் அடிப்பேன் நாயே என்று கூறியிருக்கிறேன்': பிக்பாஸ் நடிகை

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவரை செருப்பால் அடிப்பேன் நாயே என்று கூறியிருக்கின்றேன் என  பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் 'கோட்' திரைப்படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்? வெங்கட் பிரபு அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்து அறிவிப்பை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.