இன்று கோடிகளில் புரளும் விஜய்யின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்ததாக மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் என்றும் அவர் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் விஜய்யின் முதல் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவலை அவரது தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது .

‘நாளைய தீர்ப்பு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக விஜய் நடித்து இருந்தாலும் அதற்கு முன்பே எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்த வகையில் விஜய் முதல்முதலாக குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 500 ரூபாய் என சமீபத்தில் எஸ்.ஏ சந்திரசேகர அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

500 ரூபாய் சம்பளத்தில் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த விஜய், இன்று சுமார் 100 கோடி சம்பளத்தை நெருங்கி உள்ளது அவரது உண்மையான உழைப்பு மற்றும் சினிமாவின் மீது அவருக்கு இருக்கும் அளவில்லா ஈடுபாடு என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

3 சம்மன்களுக்கு ஆஜராகாத இளையராஜாவுக்கு இறுதி நோட்டீஸ்: ஜிஎஸ்டி ஆணையம் அதிரடி

இசைஞானி இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட அதிக தொகை: இறந்த மகனின் உடலை தோளில் சுமந்து பைக்கில் சென்ற தந்தை!

ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட தொகையை கொடுக்க முடியாததால் மகனின் உடலை இரு சக்கர வாகனத்தில் தோளில் சுமந்து சென்ற ஏழை தந்தை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹாலிவுட் படக்குழுவினர்!

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான 'தி க்ரே மேன்' என்ற படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கடனை திருப்பி கேட்டவரை தோழியுடன் ஆபாச படம் எடுத்து மிரட்டிய சென்னை பெண் கைது!

கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தோழியுடன் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சென்னை பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

டுவிட்டர் ஓனர் எலான் மஸ்க் இடம் கோரிக்கை வைத்த தமிழ் இயக்குனர்!

உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் இடம் இளம் தமிழ் இயக்குனர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது