தேங்க்யூ தம்பி: சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன விமல்!

  • IndiaGlitz, [Monday,March 07 2022]

நடிகர் விமல் தனது சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயனுக்கு ’தேங்க்யூ தம்பி’ என்று பதிவு செய்திருப்பதை அடுத்து அந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

நடிகர் விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’விலங்கு’ என்ற வெப்தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் விமல் காவல்துறை அதிகாரியாக இந்த தொடரில் சிறப்பாக நடித்திருந்தார் என்பதும், ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலையை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரி கேரக்டருக்கு கச்சிதமாக விமல் பொருந்தி இருந்தார் என்றும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. மேலும் இந்த படத்தில் கடைசி வரை கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ் கொண்டுசெல்லப்பட்டதற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விமல் நடித்த நடித்த ’விலங்கு’ வெப்தொடரை சமீபத்தில் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துக்களை படக்குழுவினர்களுக்கு தெரிவித்துள்ளார். ’விலங்கு’ தொடரில் நடிப்பு, உருவாக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை ஆகிய அனைத்துமே மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் குறிப்பாக விமலின் நடிப்பும் பிரசாந்தின் இயக்கமும் மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாலசரவணன் மற்றும் கிச்சா ஆகியவர்களுக்கு தனது சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். சிவகார்த்திகேயனின் இந்த பதிவுக்கு நடிகர் விமல் ’தேங்க்யூ தம்பி’ என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

விமல் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர் என்பதும், அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அனைவரும் அறிந்ததே,.

More News

ஷேர்வார்னே மரணம்: பூங்கொத்துடன் ஆம்புலன்ஸில் நுழைந்த பெண்மணி யார்?

ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேர் வார்னேவு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு

சிவகார்த்திகேயன் மாதிரி என்னால் நடிக்க முடியாது: அருள்நிதி

சிவகார்த்திகேயன் மாதிரி தன்னால் நடிக்க முடியாது என நடிகர் அருள்நிதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

'எதற்கும் துணிந்தவன்' படத்தை திரையிட வேண்டாம்: பிரபல அரசியல்வாதி அறிக்கை

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட வேண்டாம் என பாமக மாநில

'அரபிக்குத்து' பாடல் குறித்து விஜய் என்ன சொன்னார்? சிவகார்த்திகேயன் தகவல்!

விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து'  என்ற பாடல்

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்துவிட்டோம்: புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த்த தனுஷ் 

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இணைந்து விட்டோம் என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.