ஐபிஎல் கிரிக்கெட் போல இனி ஜல்லிக்கட்டு லீக். நடிகர் வீரா

  • IndiaGlitz, [Friday,January 20 2017]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது வீட்டின் முன் நேற்று முன் தினம் இரவு முதல் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் பலரசிகர்களும் நடிகர்களும் உட்கார்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் வீரா இந்த போராட்டத்தின்போது பேசியதாவது: முதலில் பீட்டாவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு, பீட்டாவால் ஏற்படுத்தப்பட்ட தடை காரணமாக இனி தமிழகம் முழுவதும் ஐபில் லீக் போல லட்சக்கணக்கானோர் மத்தியில் நடைபெறும். இனி ஜல்லிக்கட்டை தமிழகர்கள் நேரிலும் டிவியிலும் இண்டர்நெட்டிலும் பார்ப்பார்கள். ஜல்லிக்கட்டு என்பது சிம்பு படம் போல. தடை விதிக்க விதிக்கத்தான் அதன் பாப்புலாரிட்டி கூடும்.

இன்னிக்கு ஜல்லிகட்டு நடத்தக்கூடாது என்று சொல்வார்கள். நாளை பொங்கலை தெருவில் வைக்கக்கூடாது, வீட்டுக்குள் வைக்கணும்ன்னு சொல்லுவாங்க, அப்புறம் பட்டுச்சேலை கட்டக்கூடாதுன்னு சொல்லுவாங்க, அம்மாவை மம்மின்னு கூப்பிடணும்ன்னு சொல்வாங்க, அப்புறம் தமிழ்ல்ல பேசினா வரி கட்டணும்ன்னு சொல்வாங்க. எங்க கலாச்சாரத்தை காப்பாற்ற யாரும் வரவேண்டாம், எங்களுக்கு எங்கள் கலாச்சாரத்தை காப்பற்ற தெரியும்

More News

நடிகர் சங்கத்தின் மெளன போராட்டத்தில் அஜித்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒருபக்கம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நான்கு நாட்களாக போராடி வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று ஒருநாள் மெளன போராட்டம் நடத்துவதாக அறிவித்தது...

ஊடகங்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள்

இந்நிலையில் நடிகர் சங்கம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மெளன அறப்போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்த போராட்டம் மாணவர்களின் போராட்டத்தை ஊடகங்களில் இருந்து திசை திருப்பும் வகையில் உள்ளதாக மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்...

ரயில் மறியல் செய்யும் மாணவர்களுக்கு ஐபிஎஸ் அதிகாரியின் அன்பு எச்சரிக்கை

ஜல்லிக்கட்டு போராட்டம் அல்ங்காநல்லூர், சென்னை மெரீனா மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டை காப்பாற்ற கைகோர்ப்போம், ஜெயிப்போம். கீர்த்திசுரேஷ்

தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார, பண்பாடான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை காப்பாற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகல் பாராது, கடுங்குளிரில் கடந்த மூன்று நாட்களாக சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போராடி வருகின்றனர்.

டெல்லியில் இருந்து முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்பாதது ஏன்? புதிய தகவல்

இந்நிலையில் இன்று மாலை முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இன்னும் திரும்பவில்லை. டெல்லியில் முதல்வர் ஓபிஎஸ் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் ஜல்லிக்கட்டை உடனே நடத்த தமிழக அரசே அவசர சட்டம் இயற்றக்கூடிய வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது...