close
Choose your channels

முதலில் கதாநாயகன், அப்புறம் காமெடியன்: மறுபிறவி எடுத்த வடிவேலு பேட்டி

Saturday, August 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வீட்டிலும் எனக்கு ரசிகர் மன்றம் உண்டு எனவும் ரெட் கார்டு நீக்கப்பட்டது எனக்கு மறுபிறவி போல் உள்ளது என்றும் நடிகர் வடிவேலு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட்கார்டு நீக்கப்பட்டது குறித்து நடிகர் வடிவேலு நெகிழ்ச்சியுடன் கூறியபோது ’மீண்டும் சினிமாவில் நான் தோன்றப் போவது முதல் முதலில் நான் வாய்ப்பு தேடும் போது ஏற்பட்ட உணர்வு போன்று இருக்கிறது. எனது ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெக்கார்ட் தடையை நீக்கியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது எனக்கு மறுபிறவி என்றும் வடிவேலு தெரிவித்தார். சுராஜ் இயக்கும் ’நாய் சேகர்’ படத்தில் செப்டம்பர் மாதம் முதல் நடிக்க உள்ளதாகவும் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டு பின்னர் மீண்டும் காமெடியனாக நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையிலான கருத்து வேறுபாடு சமரசமாக பேசி முடிக்கப்பட்டு மீண்டும் ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த வடிவேலுவை மீண்டும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment