close
Choose your channels

புற்றுநோயால் பிரபல நடிகரின் மனைவி உயிரிழப்பு… திரையுலகினர் அதிர்ச்சி!

Monday, September 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம்வருபவர் நடிகர் உத்தேஜ். இவருடைய மனைவி பத்மாவதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொடர் சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்றுகாலை அகால மரணமடைந்தார்.

தெலுங்கு நடிகர் உத்தேஜின் மனைவியான பத்மாவதி மயூகா டாக்கிஸ் ஃபிலிம் ஆக்டிங் ஸ்கூலை நிர்வகித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் பசவதாரகம் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி பத்மாவதி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருடைய உயிரிழப்பை அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து நடிகர் உத்தேஜிற்கு ஆறுதல் கூறினார். அப்போது நடிகர் சிரஞ்சீவியை கட்டிப்பிடித்து நடிகர் உத்தேஜ் கதறி அழும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

நடிகர் சிரஞ்சீவியைத் தவிர நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை ஜீவிதா போன்றோரும் மருத்துவமனைக்கு விரைந்து நடிகர் உத்தேஜ்க்கும் அவருடைய மகளுக்கும் ஆறுதல் கூறியுள்ளனர். நடிகர் உத்தேஜ்ஜின் மனைவி பத்மாவதியின் உயிரிழப்பைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment