அமைச்சர் உதயநிதியுடன் சந்திப்பு.. வெள்ள நிவாரண நிதியாக சூரி கொடுத்த தொகை..!

  • IndiaGlitz, [Thursday,December 14 2023]

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் திரையுலக பிரபலங்கள் தாராளமாக வெள்ள நிவாரண நிதி அளித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.

சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய் கொடுத்த நிலையில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாய் அளித்தனர். இந்த நிலையில் நடிகர் சூரி தனது சார்பிலும் தான் நடத்தி வரும் மதுரை அம்மன் உணவகம் சார்பிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பத்து லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் – கன மழை நிவாரணப் பணிகளுக்கு துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், திரைப்பட நடிகர் சகோதரர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்’ என பதிவு செய்துள்ளார்.