மகன், மகள் பெயரில் ரொக்கமாக கொரோனா நிதி கொடுத்த நடிகர் சூரி!

  • IndiaGlitz, [Friday,June 04 2021]

தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வமான கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தரும் வகையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் நிதி உதவிகளை செய்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தமிழக அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் சூரி தனது பங்காக ரூபாய் 10 லட்சம் மற்றும் தனது மகன் மகள் சார்பாக ரூபாய் 25,000 கொடுத்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்காக நடிகர் சூரி அவர்கள் ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா மற்றும் மகன் சர்வான் சார்பாக ரூபாய் 25,000 ரொக்கத்தையும் அளித்துள்ளார்

இந்த தொகை மற்றும் காசோலையை நடிகர் சூரி, சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான உதயநிதி அவர்களை நேரில் சந்தித்து வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

'அசுரன்' ரீமேக் படத்திற்காக ப்ரியாமணி எடுத்த ரிஸ்க்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'அசுரன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி தேசிய விருதுகளையும் குவித்தது என்பது தெரிந்ததே.

மேக்கப் போட்டு வொர்க்-அவுட் பண்ணுங்க: பிக்பாஸ் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற படத்தில் 'புஷ்பா' என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா என்பது தெரிந்ததே.  பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்,

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி… தமிழ அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

போலீஸில் சரணடையும் 'த்ரிஷ்யம்' நாயகன்: கிளைமாக்ஸை மாற்றிய இயக்குனர் யார் தெரியுமா?

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 'த்ரிஷ்யம்' திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் மணிகண்டனை, கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதிமுக - வின்  முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக,