செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது ஏன்? சிவகுமார் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,October 29 2018]

நடிகர் சிவகுமார் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தபோது ஒரு இளைஞர் ஆர்வக்கோளாறில் சிவகுமாருடன் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார். இதுகுறித்து நெட்டிசன்கள் பல விமர்சனங்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது ஏன்? என சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா?

தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? விஐபி என்றால் தான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களிலும், விமான நிலையங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளேன் என்பது  உங்களுக்குத் தெரியுமா? நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும், என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். அதேபோல், அடுத்தவர்களை எந்தளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.

இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறினார்.

 

More News

மூன்று மணி நேரத்தை நெருங்கிய 'சர்கார்' ரன்னிங் டைம்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் குறித்தும் அதன் கதை குறித்தும் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இந்த படம் தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளதை படக்குழுவினர் உறுதி செய்து வருகின்றனர்.

போலீசார் முன் உடைகளை களைந்த மாடல் அழகி

மும்பையில் உள்ள அபார்ட்மெண்டில் போலீசார் முன் மாடல் அழகி ஒருவர் உடையை கழட்டி கலாட்டா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் படத்துக்கு மட்டும் தான் எல்லாம் பண்ணுவீங்களா: எச்.ராஜாவை கலாய்த்த ஆடம்ஸ்

விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்தின் மீது மட்டும் வழக்கு போடுபவர்கள் சின்ன படத்தின் மீதும் வழக்கு போட்டால் அந்த படத்திற்கும் இலவச விளம்பரம் கிடைக்கும் என நடிகர் ஆடம்ஸ் கலாய்த்துள்ளார்

இது ஒரு பச்சைப்படுகொலை! ஜிவி பிரகாஷ் ஆவேசம்

சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த சாமிவேல்-சின்னப்பொண்ணு. தம்பதியின் 8 வயது மகள் ராஜலட்சுமி என்ற சிறுமியை

'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் நடிகை வரலட்சுமி அதிரடி கருத்து

கடந்த சில நாட்களாக 'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது.