1461 நாள் ஆயிருச்சு.. நடிகர் சேதுராமன் நினைவு நாளில் மனைவியின் உருக்கமான பதிவு..!

  • IndiaGlitz, [Wednesday,March 27 2024]

மறைந்த நடிகர் சேதுராமனின் நினைவு நாளை அடுத்து அவரது மனைவி உமா தன்னுடைய சமூக வலைதளத்தில் அவரை பிரிந்து 1461 நாட்கள் ஆகிவிட்டது என்று உருக்கமாக பதிவு செய்துள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது.

‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ என்ற படம் உள்பட ஒரு சில படங்களில் நடித்த சேதுராமன் ஒரு மருத்துவர் என்பதும், கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த கடந்த 2000 ஆண்டு அவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதும் தெரிந்தது

சேதுராமன் மரணம் அடைந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்த நிலையில் அதன் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் சேதுராமன் நினைவு தினத்தில் உமா தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று மார்ச் 26 ஆம் தேதி அவருடைய நினைவு தினத்தை முன்னிட்டு உமா தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

நீங்கள் எங்களை விட்டு பிரிந்து இன்றுடன் 1461 நாள்கள் ஆகிவிட்டது. நீங்கள் எங்களுடன் இல்லை என்றாலும் நம்முடைய குடும்பத்திற்கு பெரிய தூணாக நீங்கள் தினமும் இருந்து வருகிறீர்கள். நாங்கள் உங்களைப் பற்றி நினைக்காத தினமே இல்லை என்று கூறலாம்.

உங்களைப் பற்றி நாங்கள் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். உங்களைப் பற்றி நினைத்தால் கூட எங்கள் முகத்தில் புன்னகை படர்கிறது. ஏதோ ஒரு ரூபத்தில் நீங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

'சுந்தரி' சீரியல் நடிகருக்கு திருமணம்.. மணமகளும் சீரியல் நடிகை தான்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' சீரியலில் நடிக்கும் நடிகருக்கு இன்று திருமணம் ஆகி உள்ள நிலையில் மணமகளும் ஒரு சீரியல் நடிகை தான் என்பதை அடுத்து சின்னத்திரை உலகினர்

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் அசோக்செல்வன் அடுத்த படம்.. தேதி அறிவிப்பு..!

கடந்த சில ஆண்டுகளாக நேரடியாக ஓடிடியில் படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் அசோக் செல்வன் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டு அது குறித்த ட்ரெய்லர் வீடியோவும்

இன்று காலை நடிகர் சித்தார்த்துக்கு திருமணமா? மணமகள் யார்?

இன்று காலை நடிகர் சித்தார்த் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ திரைப்படம்.. 'அரண்மனை 4' நடிகை தான் ஹீரோயின்..!

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கோத்ரா ரயில் இருக்கு சம்பவம் நடந்தது என்பதும் இந்த சம்பவம் குறித்து ஒரு சில திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது

கூகுள் பே மூலம் பிச்சை கேட்கிறார்கள்.. பிக்பாஸ் நடிகையின் அதிர்ச்சி தகவல்..!

கூகுள் பே மூலம் பிச்சை கேட்கிறார்கள் என பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட்  நடிகை ஹினாகான் கூறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்