வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நடிகர் செந்தில்

  • IndiaGlitz, [Friday,June 19 2020]

இந்தியா மற்றும் சீன எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த இந்திய, சீன ராணுவ வீரர்களிடையேயான மோதலில் இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் செந்தில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி உள்பட 20 ராணுவ வீரருக்கும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

சீன எல்லைக்கும் இந்திய எல்லைக்கும் இடையே ஒரு தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் சில பேர் மரணம் அடைந்தனர். சிலபேர் காயம் அடைந்தனர். அதில் நமது தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுரம் ஜில்லாவை சேர்ந்த பழனி என்பவர் வீரமரணம் அடைந்துள்ளார். பல ஆண்டுகாலம் நமது ராணுவத்தில் பணியாற்றிய அவர் தற்போது வீரமரணம் அடைந்துள்ளார். அவருடைய குடும்பத்தார்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு நடிகர் செந்தில் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
 

More News

எங்கிருந்தாலும் வாழ்க: 60களில் கொடிகட்ட பறந்த பழம்பெரும் பாடகர் மறைவு

தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரும், கடந்த 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல காலத்தால் அழியாத பாடல்களைப்

திரும்பவுமா??? பெய்ஜிங்கில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!!! விமான நிலையம், பள்ளிகள் மூடல்!!!

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து சீனா மீண்டு வந்துவிட்டது. உலகின் மற்ற நாடுகள் எல்லாம் மரணப்பயத்தில் இருக்கும் போது பரவலுக்கு காரணமான சீனா மட்டும் நிம்மதியாக இருக்கிறது,

எரியுற தீயில எண்ணெய் ஊற்றும் நேபாளம்: இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம்!!!

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லைப்  பகுதியில் பிரச்சனை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே நேபாளம் எல்லை வரையறைக் குறித்து இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கூறிவந்தது.

கொரோனா நேரத்தில் மனித இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த விரும்பும் அரபு நாடு!!! என்னவா இருக்கும்???

ஈரான் நாட்டில் தற்போது அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கொரேனா சிகிச்சைக்கு புது டெக்னிக்: எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை!!!

கொரோனாவிற்குத் தடுப்பு மருந்து மட்டுமல்ல சிகிச்சையும் சிக்கல் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.