விஷப்பாம்பு என்னை 3 முறை கடித்தது: பிரபல நடிகரின் அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Monday,December 27 2021]

பிரபல நடிகர் ஒருவர் தன்னை விஷப்பாம்பு மூன்று முறை கடித்ததாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்தது என்ற செய்தி நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அதன்பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதும் செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே.

பிரபல நடிகர் சல்மான்கானுக்கு பிறந்தநாளை அடுத்து அவர் தனது பண்ணை வீட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பார்ட்டி கொடுத்ததாகவும், அப்போது அவர் ஒரு பாம்பை பார்த்ததாகவும் அந்த பாம்பை அவர் ஒரு குச்சியின் மூலம் எடுத்து வெளியே எடுத்து போட முயன்ற போது அந்த பாம்பு அவரை மூன்று முறை கடித்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பண்ணை வீட்டில் உள்ள விஷ பாம்பு என்னை மூன்று முறை கடித்தது என்றும் அதனை அடுத்து நான் மருத்துவமனையில் 6 மணிநேரம் சிகிச்சை பெற்றேன் என்றும் தற்போது நலமாக இருக்கிறேன் என்றும் நடிகர் சல்மான் கான் அந்த பேட்டியில் கூறியுள்ளார். பிரபல நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் தற்போது அவர் உடல் நலத்துடன் இருக்கிறார் என்ற தகவல் சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.