நடிகர் சாயாஷி ஷிண்டேவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!

  • IndiaGlitz, [Saturday,April 13 2024]

பிரபல நான் குணச்சித்திர நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’பாரதி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சாயாஜி ஷிண்டே. இதனை அடுத்தவர் அஜித் நடித்த ’பூவெல்லாம் உன் வாசம்’ ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ விக்ரம் நடித்த ’தூள்’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ உட்பட பல திரைப்படங்களில் அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ’அகோரி’ என்ற படத்தில் கூட அவர் ஒரு முக்கிய கேரக்டரில் இருந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென சாயாஜி ஷிண்டேவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

More News

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகை திடீர் விலகல்.. இவருக்கு பதில் இவர் யார் தெரியுமா?

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் திடீரென விலகுவதும் இதனை அடுத்து அந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று ஒரே ஒரு டைட்டில் கார்டு

துல்கர், ஜெயம்ரவியை அடுத்து இன்னொரு பிரபல நடிகரும் விலகலா? என்ன நடக்குது 'தக்லைஃப்' படத்தில்?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு

தனுஷை மகன் என கோரிய மதுரை தம்பதி வீட்டில் நிகழ்ந்த சோகம்.. என்ன நடந்தது?

நடிகர் தனுஷை தனது மகன் என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த தம்பதி வீட்டில் நிகழ்ந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாவின் 'வணங்கான்' படம் குறித்த சூப்பர் அப்டேட்.. அருண் விஜய்யின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்

'சிங்கம் 4' படம் குறித்து ஏமாற்றமான செய்தி சொன்ன ஹரி.. ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட்..!

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான 'சிங்கம்' படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அடுத்தடுத்து இந்த படத்தின்  இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் வெளியாகி