நடிகர்களை கொண்டாட வேண்டாம், அவர்கள் பெரியார், அம்பேத்கார் அல்ல: பிரபல நடிகர் பேட்டி!

  • IndiaGlitz, [Sunday,September 11 2022]

நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம் அவர்கள் ஒன்றும் பெரியார், அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்கள் இல்லை என பிரபல நடிகர் ஒருவரே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனதின் மையம் என்ற அறகட்டளையின் ஒரு அங்கமான நேசம் சேவை மையம் தொடக்க விழா ஈரோட்டில் நடந்தது. இதில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியபோது, ‘தற்கொலை என்பது தவிர்க்க வேண்டிய மிகவும் அவசியமான ஒன்று என்றும் தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை, மூடநம்பிக்கைகள், மன அழுத்தம் என்றும் மன அழுத்தத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டவன் நான் என்றும், முதல் தலைமுறை பட்டதாரிகளை நீட் தேர்வு பாதிக்கும் என்றும் நடிகர் சத்யராஜ் கூறினார். படிக்க தெரியாத பெற்றோரின் குழந்தைகள் படித்து முன்னேறுவதற்கு நீட்தேர்வு தடையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம் என்றும் நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர் என்று ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் ஆனால் நடிகர்களுக்கு நடிப்பு தவிர நடிகர்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் கூறினார். நடிகர்கள் பெரியார், காரல் மார்க்ஸ், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களோ, அறிஞர்களோ கிடையாது என்றும், நடிகர்களுக்கு சாப்பாடு கொடுங்கள் ஆனால் அவர்கள் தலையில் தூக்கி கொண்டாட வேண்டாம் என்றும் அது தேவையில்லை என்றும் நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.
 

More News

சிக்னலில் புத்தகம் விற்கும் பெண்ணுடன் செல்பி எடுத்த நடிகை: வீடியோ வைரல்!

சென்னை சாலையில் சிக்னலில் புத்தகம் விற்கும் பெண்ணுடன் தமிழ் நடிகை ஒருவர் செல்பி எடுத்து அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூர்யாவின் 'வணங்கான்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'வணங்கான்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது என்பதும் இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே 

'பொன்னியின் செல்வன்' டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில்

'எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கிங்க'.. ரசிகரின் கேள்வியால் கடுப்பான சீரியல் நடிகை ரேஷ்மா!

சீரியல் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோது ஒரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? என்ற கேள்வியை கேட்டதற்கு கடுப்பாகி,

'கோப்ரா' நிலைமை தெரிந்தும் 3 மணி நேர படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்: என்ன ஆகும்?

சமீபத்தில் வெளியான விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா' திரைப்படம் மூன்று மணி நேரம் என்ற நீண்ட ரன்னிங் டைம் கொண்ட படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி