அரசியல்வாதிகள் மிரட்டலால் இன்று என் படம் வெளியாகவில்லை.. தமிழ் நடிகர் அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Friday,July 05 2024]

இன்று வெளியாக இருந்த என்னுடைய படம் அரசியல்வாதிகள் மிரட்டலால் வெளியாகவில்லை என்று பேட்டி அளித்துள்ளது பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர் ரஞ்சித் ’கவுண்டம்பாளையம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து இந்த படத்தை அவரே இயக்கி இருந்தார். இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில் ஜூலை 5ஆம் தேதி அதாவது இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு முன்பதிவுகள் தொடங்கின.

இந்த நிலையில் திடீரென இன்று தனது படம் வெளியாகவில்லை என்று அறிவித்துள்ள ரஞ்சித் அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் அரசியல்வாதிகளால் மிரட்டப்படுவதாக காரணம் என்று கூறியுள்ளார்.

’கவுண்டம்பாளையம்’ திரைப்படம் நாடக காதல் கதை அம்சம் கொண்டது என்று கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே எதிர்ப்பு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் தியேட்டர் உரிமையாளர்கள் மிரட்டப்படுவதால் வெளியாகவில்லை என்றும் விரைவில் தமிழக அரசின் அனுமதி பெற்று புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ரஞ்சித்தின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உண்மையிலேயே அரசியல்வாதிகள் மிரட்டலால் தான் என்று இந்த படம் வெளியாகவில்லையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.