விஜய் அழைத்தால் அவரது கட்சியில் சேருவேன்.. திமுக, அதிமுக, பாஜகவில் இருந்த நடிகர் பேச்சு..!

  • IndiaGlitz, [Sunday,July 07 2024]

திமுக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளில் இருந்த நடிகர் தான் இப்போது எந்த கட்சியிலும் இல்லை என்றும் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்பதாகவும் அவர் அழைத்தால் அவருடைய கட்சியில் இணைய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகவேள் எம்ஆர் ராதாவின் மகன் ராதாரவி 50 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வரும் நிலையில் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் கடந்த 2000 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார் என்பதும், அதன் பின்னர் அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் அவர் சில ஆண்டுகள் இருந்த நிலையில் அதன் பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்தார். ஆனால் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து அவர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டார். இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அவர் அதிமுகவில் இருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் அதிமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் 2019 ஆம் ஆண்டு சேர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் ’கடைசி தோட்டா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய போது ’தான் இப்போது எந்த கட்சியிலும் இல்லை என்றும் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்பதாகவும், அவர் என்னை அழைத்தால் அவருடைய கட்சியில் நிச்சயம் நினைவேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ’கடைசி தோட்டா’ திரைப்படத்தில் கதையின் கரு நான் என்னுடைய கேரக்டர் தான் என்றும் வனிதா விஜயகுமார் உள்பட பலர் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

More News

சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்.. ஆனாலும் நீங்க செய்தது தப்புதான்..!

https://cinema.vikatan.com/kollywood/theliverdoc-apologises-to-samantha-ruth-prabhu-for-endangering-public-health

திருவள்ளுவர் மனைவி வாசுகி கேரக்டர்.. கடுமையாக விரதம் இருக்கும் நடிகை.!

உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் திருவள்ளுவர் மனைவியாக நடிக்கும் நடிகை

தமிழ் நடிகை தான் ஹீரோயின்.. ஷாருக்கான் செய்த பரிந்துரை.. விட்டதை பிடித்துவிட்டாரா?

ஷாருக்கான் தனது முந்தைய படத்தின் நாயகியாக தமிழ் நடிகையை பரிந்துரை செய்த நிலையில் அப்போது அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது ஷாருக்கான் நடிக்க இருக்கும்

பிரபாஸ் அடுத்த படத்தில் தென்கொரிய வில்லன்.. சீன, கொரிய மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டம்.!

பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் வசூல் ரூ.800 கோடியை தாண்டி ரூ.1000 கோடி என்ற இலக்கை

சிம்புவின் 'எஸ்.டி.ஆர். 48' படத்தை கைவிட்டதா ராஜ்கமல்? தனுஷ் பட தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை?

சிம்பு நடிப்பில், கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் '