ரஜினியை அடுத்து சச்சின் குறித்து சர்ப்ரைஸ் தகவலை கூறிய பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Friday,December 27 2019]

பிரபல மலையாள நடிகர் மற்றும் இயக்குனருமான பிரித்திவிராஜ் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தும், தான் அதனை மிஸ் செய்துவிட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்காக ரஜினியிடம் அவர் ஒரு நீண்ட மன்னிப்பு கடிதத்தை எழுதியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் ரஜினியை அடுத்து தற்போது சச்சின் குறித்த ஒரு சர்பைஸ் தகவலை அவர் தெரிவித்துள்ளார். ஒருமுறை கொச்சியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் செல்லும்போது தன்னுடைய அருகில் சச்சின் வந்து உட்கார்ந்து இருந்ததாகவும், அவரைப் பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் நீண்ட நேரத்துக்குப் பின்னர் அவரிடம் தயங்கி தயங்கி பேசியதாகவும் பிறகு மும்பை செல்லும் வரை அவரிடம் தொடர்ந்து பேசியதாகவும் இந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது என்றும் கூறினார்

நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரை பல சந்தர்ப்பங்களில் சந்திப்பார்கள், ஆனால் அதனை ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் ரசிகர்கள் எப்போதும் ஞாபகம் வைத்திருப்பார்கள். அதுபோல் சச்சின் இந்த நிகழ்வை மறந்திருக்கலாம் ஆனால் சச்சினின் ரசிகராக என்னால் இதனை மறக்க முடியாது என்று பிரித்திவிராஜ் கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட இணையத்தை கலக்கும் புகைப்படம்..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாலைவனத்தில் ஜோஷ்வா கிரிப்ஸ் என்ற புகைப்பட கலைஞர் சூரிய கிரகணத்தை பதிவு செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கோவை 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

முடிவுக்கு வந்தது விஜய் ஆண்டனியின் அடுத்த படம்!

விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அவர் அக்னி சிறகுகள்,

நான் இறந்தவுடன் என்னை ஸ்ரீதேவி கல்லறை அருகே புதைத்துவிடுங்கள்: பிரபல இயக்குனர்

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஒருவர் தான் இறந்தவுடன் தன்னுடைய உடலை ஸ்ரீதேவி கல்லறை அருகே புதைத்து விடுங்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பேய் பிடித்தவர்களை குணப்படுத்த, மருத்துவர்களுக்கு புதிய பாடப்பிரிவு..! பனாரஸ் பல்கலைக்கழகம்.

பேய் பிடித்தவர்களை குணப்படுத்த மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கும் புதிய பாட பயிற்சி திட்டத்தை பனாரஸ் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.