இப்போது, சரியான நேரம் வந்துவிட்டது.. அஜித் படத்தில் இணைந்ததை அறிவித்த பிரபல நடிகர்..!

  • IndiaGlitz, [Thursday,October 03 2024]

அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்துள்ளதாக பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்துள்ளதாக சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

அஜித் அவர்களின் 'குட் பேட் அக்லி’ படத்தில் நான் நடித்து வருவது உண்மை. இது என் கனவுகளில் ஒன்று. 'மங்காத்தா' படத்தில் இருந்து தல அஜித் அவர்களின் ஒவ்வொரு பட அறிவிப்பு வெளியாகும் போது, அந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்.

அஜித் ரசிகர்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தனர். கண்டிப்பாக அவருடைய அடுத்த படத்தில் நான் இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால், ஒரு சில தடைகள் ஏற்பட்டு கொண்டே இருந்த நிலையில், இப்போது சரியான நேரம் வந்துவிட்டது. ஆம், நான் குட் பேட் அக்லி’ படத்தில் இருக்கிறேன்.

கடவுளுக்கும், அஜித் அவர்களுக்கும், சுரேஷ் சந்திரா அவர்களுக்கும், மைத்திரி மூவிஸ்க்கும் எனது நன்றிகள். தல அஜித் உடன் என்னை பார்க்க காத்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தில் இருக்கிறேன். மற்ற விவரங்களை என்னால் இப்போது பகிர முடியாது. மன்னிக்கவும்.

குட் பேட் அக்லி’ படத்தின் சில நாட்களின் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டேன். என்னால் ஒரு விஷயம் மட்டும் கூற முடியும்: அஜித் அவர்கள் மிகவும் பணிவு மற்றும் உண்மையானவர் என்பதை படப்பிடிப்பின் போது அறிந்து கொண்டேன், என்று கூறியுள்ளார்.

பிரசன்னாவின் இந்த பதிவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்.. 'தளபதி 69' படத்தில் இணைந்த ஸ்டைலிஷ் இயக்குனர்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சற்றுமுன், இப்படத்தில்

அரசியல்வாதிகளை நினைத்தால் அருவருப்பாக உள்ளது: சமந்தா விவகாரம் குறித்து பிரபல நடிகர்..!

நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் சுரேகாவுக்கு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர், "அரசியல்வாதிகளை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது"

இயக்குனரான சூர்யா மகள்.. முதல் படத்திற்கு கிடைத்த விருது: ஜோதிகா பெருமிதம்..!

நடிகர் சூர்யாவின் மகள் தியா ஆவணப்படம் ஒன்றை இயக்கிய நிலையில், அந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகை ஜோதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து,

நயன்தாராவின் அடுத்த படம் நேரடி ஓடிடி ரிலீஸா? என்ன காரணம்?

நடிகை நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா விவகாரம்: முன்னாள் மருமகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நாகார்ஜுனா

நடிகை சமந்தா குறித்து தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அதற்கு நாகார்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.