எனக்கு முதல்வர் கொடுத்த பணியை சிறப்பாக செய்வேன்: நடிகர் நாசர்

தமிழக முதல்வர் எனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்வேன் என்று நடிகர் நாசர் முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் நாசருக்கு தற்போது கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ’கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’ என்ற விருதை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது

இந்த விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகர் நாசர், இயக்குநர் கரு பழனியப்பன் ஆகியோர் உள்ளனர். இந்த குழுவால் தேர்வு செய்யப்படும் கலைஞர்களுக்கு 10 லட்ச ரூபாய் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெறும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமனம் செய்ததற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும். பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டு வரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி.

கலைஞர்களுக்கு பொருள் அல்ல ப்ரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும் தான். “கலைமாமணி” என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள். அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி. கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு நாசர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

More News

செந்தில் காமெடியை அவருடைய பேத்தி பேசும் அழகே தனி: வைரல் வீடியோ

காமெடி நடிகர் செந்தில், கவுண்டமணி உடன் நடித்த காமெடி காட்சி ஒன்றை செந்திலின் பேத்தி மிருதி பேசும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

என்னை கிண்டல் செய்வதாக நினைத்து தரத்தை தாழ்த்தி கொள்ள வேண்டாம்: வெங்கடேஷ் பட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் 'கடந்த வார நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது என்று கூறினார்.

சிவகார்த்திகேயனை அடுத்து ரஜினியை சந்தித்த 'டான்' பிரபலம்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இன்று காலை கார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின் வந்த அஜித்தின் அதிகாரபூர்வ பதிவு: ஸ்தம்பித்த இணையதளங்கள்!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதால் அவர் சொல்ல விரும்பும் கருத்துகளை தனது மேனேஜரின் சமூக வலை தளங்கள் மூலமே வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே

கட்டிப்பிடிக்கும் கணவர், கர்ப்பமானதை அறிவித்த சன் டிவி தொகுப்பாளினி!

சன் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஒருவர், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .