சென்னை மருத்துவமனையில் நடிகர் நாசர்?

  • IndiaGlitz, [Tuesday,September 15 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷால் அணியின் சார்பில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு சரத்குமாரை எதிர்த்து நடிகர் நாசர் போட்டியிடவுள்ளார். தனது அணிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நாசர் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாசருக்கு நெஞ்சு வலி என்றும் அதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மிக வேகமாக இணையதளங்களில் வதந்தி பரவியது. இதனால் உடனடியாக நாசரின் மனைவி கமீலா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மைதான் என்றாலும் இது ஒரு வழக்கமான மாஸ்டர் செக்-அப் என்றும் தனது கணவர் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் நாசர் தற்போது நலமாக இருப்பதாகவும், அவர் நாளை வீடு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

உண்மை இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். சிம்பு ஆவேசம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலை ஒட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராதிகா சரத்குமார், சரத்குமார் ஆகியோர் விஷால் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்...

வாடகை வீட்டில் கஷ்டப்படும் நடிகர் கிஷோர்

கோலிவுட் திரையுலகில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் கிஷோர், நாயகனாக நடித்து வரும் படம் 'கடிகார மனிதர்கள்'...

'புலி'யுடன் 'பாகுபலி'யை ஒப்பிட வேண்டாம். நட்டி நட்ராஜ்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து படம் சென்சாருக்கு செல்வதற்கு தயார்...

விஷால் அணியினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ராதிகா சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி என கூறப்படும் விஷால்...

எங்கள் அணி வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி. சரத்குமார் நம்பிக்கை

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளும் விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 1 முதல் 3 வரை நடைபெறவுள்ளது...