அரசியல்வாதிகளை நினைத்தால் அருவருப்பாக உள்ளது: சமந்தா விவகாரம் குறித்து பிரபல நடிகர்..!

  • IndiaGlitz, [Thursday,October 03 2024]

நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் சுரேகாவுக்கு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர், அரசியல்வாதிகளை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து குறித்து தெலுங்கானா அமைச்சர் சுரேகா சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்துக்கு, நடிகை சமந்தா, நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், பல தெலுங்கு திரையுலகினர் அமைச்சருக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல நடிகர் நானி தனது சமூக வலைத்தளத்தில், எப்படிப்பட்ட முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்துவிடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளை பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர்கள், ஊடகங்களுக்கு முன்னால் அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளை பேசுவது சரியல்ல. நமது சமூகத்தை மோசமாக பிரதிபலிக்கும் இந்த செயல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

More News

இயக்குனரான சூர்யா மகள்.. முதல் படத்திற்கு கிடைத்த விருது: ஜோதிகா பெருமிதம்..!

நடிகர் சூர்யாவின் மகள் தியா ஆவணப்படம் ஒன்றை இயக்கிய நிலையில், அந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகை ஜோதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து,

நயன்தாராவின் அடுத்த படம் நேரடி ஓடிடி ரிலீஸா? என்ன காரணம்?

நடிகை நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா விவகாரம்: முன்னாள் மருமகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நாகார்ஜுனா

நடிகை சமந்தா குறித்து தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அதற்கு நாகார்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமந்தா விவாகரத்து விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்..!

நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், முன்னாள் அமைச்சர் கேடி ராமராவ்

உங்கள் அரசியல் சண்டையில் என்னை இழுக்க வேண்டாம்: அமைச்சருக்கு நடிகை சமந்தா பதிலடி..!

தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா என்பவர் நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.