சிறை செல்வது எங்களுக்கு கோவிலுக்கு செல்வது போல்: மன்சூர் அலிகான்

  • IndiaGlitz, [Wednesday,April 25 2018]


சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் வெளியே வந்த நடிகர் மன்சூர் அலிகான், 'நாம் தமிழர் கட்சியினர்களுக்கு சிறை செல்வது கோவிலுக்கு செல்வது போல் ' என்று கூறியுள்ளார்

சமீபத்தில் பாரத பிரதமர் சென்னைக்கு வந்தபோது சீமானின் 'நாம் தமிழர் கட்சியினர் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டினர். இதனால் சீமான் உள்பட ஏராளமான நாம் தமிழர் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சீமானை வேறொரு வழக்கில் கைது செய்யப்போவதாக செய்திகள் பரவியதால் சீமான் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபம் முன் நாம் தமிழர் தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டநிலை உருவாகியது.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான், சீமானை கைது செய்தால் தன்னையும் கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் சீமானை போலீசார் கைது செய்யவில்லை

ஆனால் மறுநாள் திடீரென மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று ஜாமீனில் வெளியே வந்த மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:  ''நாம்தமிழர் கட்சியினருக்கு சிறைக்கு செல்வது கோவிலுக்கு செல்வதுபோல் என்று கூறினார். மேலும் அறவழிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நான் ஏன் திருத்தணியில் கையெழுத்திட வேண்டும்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

More News

அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் தேதி மாற்றம்

அரவிந்த்சாமி நடிக்கும் "பாஸ்கர் ஒரு ராஸ்கல் " திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது இந்த படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து விலகியது ஏன்? கமல் முன் தெளிவுபடுத்திய வழக்கறிஞர் ராஜசேகர்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் விலகினார் என்ற செய்தி இன்று காலையில் இருந்து அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. இந்த செய்தியை வழக்கறிஞர் ராஜசேகரும் மறுக்கவில்லை

எஸ்.வி.சேகர் கருத்து குறித்து கமல் கூறியது என்ன?

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி,.சேகர் சமீபத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார்.

நடிகையை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக தான் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவலை அளித்து வரும் ஸ்ரீரெட்டி டோலிவுட் திரையுலகின் பல பெரிய மனிதர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்.

விக்ரம் மகனின் 'வர்மா' படப்பிடிப்பு குறித்த தகவல்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் 'வர்மா' படத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்து வருகிறார் என்பது தெரிததே