close
Choose your channels

விஜய்யை அடுத்து சூர்யா.. லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் சீரியல் டைட்டில் அறிவிப்பு..!

Monday, September 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் நடிக்கும் புதிய சீரியலின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் ஹீரோ, குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவரது மூத்த மகள் ஜோவிதா ஏற்கனவே சில சீரியல்களில் நடித்துள்ளார். இப்போது, புதிய சீரியலில் நடிக்க இருப்பதால், அந்த சீரியலின் தலைப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதா, 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ’பூவே உனக்காக’ சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியல் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதன் பின்னர் ’அருவி’ என்ற மற்றொரு சீரியலில் நடித்தார். பின்னர் அவர் மாடலிங் துறையில் சென்றுவிட்டார்.

தற்போது, மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் நடிக்க உள்ளார். அந்த தொடரின் தலைப்பு ’மௌனம் பேசியதே’ என்று வைக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்த ’பூவே உனக்காக’ படத்தின் தலைப்பில் உருவான சீரியலில் நடித்த ஜோவிதா, இப்போது சூர்யா நடித்த ’மௌனம் பேசியதே’ படத்தின் தலைப்பில் உருவாகும் சீரியலில் நடிக்க உள்ளார். அவர் நடித்த சில சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை போலவே, ’மௌனம் பேசியதே’ சீரியலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment