இளைஞர்கள் போராட்டத்திற்கு உதவிய மீனவர்களுக்கு லாரன்ஸ் செய்த உதவி

  • IndiaGlitz, [Friday,January 27 2017]

உலகமே வியக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து, ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை இயற்ற வைத்த மாணவர்கள், இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. இந்த அறவழி போராட்டம் உலகிற்கே ஒரு வழிகாட்டியாக வருங்காலத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் கடைசி தினத்தில் விரும்பத்தகாத வன்முறை ஏற்பட்டதால் இளைஞர்களுக்கு உதவி செய்த மெரீனா பகுதிக்கு அருகில் குடியிருக்கும் மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நடுக்குப்ப மீனவர்களின் மீன் சந்தை தீ வைக்கப்பட்டதோடு, அவர்களுடைய வீடுகள் பலவும் தீக்கிரையாகின.

இந்நிலையில் தீயால் பாதிப்பு அடைந்த மீனவர்களுக்கு இன்னும் அரசாங்கமே உதவி குறித்த அறிவிப்பு எதையும் விடுக்காத நிலையில் நடிகர் லாரன்ஸ் மீனவர்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார். முதல்கட்டமாக ரூ.10 லட்சம் தருவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நேரில் சென்று நன்றிக் கூற நேரம் கேட்டுள்ளதாகவும், மாணவர் புரட்சியின் வெற்றியை கொண்டாட மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், அவர் சமீபத்தில் விடுத்த வீடியோ செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். லாரன்ஸ் அவர்களின் நிதியுதவிக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

More News

காற்று வெளியிட சிங்கள் டீஸர்

காற்று வெளியிட சிங்கள் டீஸர்

லாரன்ஸ் ரசிகர்களுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி

சமீபத்தில் முடிந்த மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்த ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவரது படம் குறித்த அறிவிப்பு ஒன்று அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வெளியாகியுள்ளது...

திட்டமிட்ட தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் 'போகன்'

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த 'போகன்' திரைப்படம் ஏற்கனவே சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்று வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே...

நயன்தாராவுடன் இணைந்து குரல் கொடுக்கும் அனிருத்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் 'மாயா'வின் வெற்றிக்கு பின்னர் நயன்தாரா மீண்டும் நடித்துள்ள திகில் படமான 'டோரா' படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது...

மணிரத்னம் படத்தின் திடீர் மாற்றம் குறித்த தகவல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி முடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ள செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....