முன்னாள் முதல்வரின் மனைவி மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகர்

  • IndiaGlitz, [Saturday,April 06 2019]

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் அவர்களின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி மீது நடிகர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்.டி.ஆர் மறைவுக்கு பின்னர் 'என்.டி.ஆர் தெலுங்கு தேசம்' என்ற கட்சியை நடத்தி வந்த லட்சுமி பார்வதி, சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் கோட்டி என்பவர் காவல்நிலையத்தில் லட்சுமி பார்வதி மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

லட்சுமி பார்வதி தன்னை காதலிப்பதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி வருவதாகவும், தனது ஆசைக்கு இணங்கினால் கட்சியில் பொறுப்பு வாங்கி தருவதாகவும் இல்லையேல் பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மிரட்டுவதாகவும் நடிகர் கோட்டி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகாருக்கான ஆதாரங்களையும் அவர் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில் நடிகர் கோட்டியின் இந்த புகாரால் ஆந்திர அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.

More News

'சூப்பர் டீலக்ஸ்' இயக்குனருக்கு முத்தங்கள் கொடுத்த பிரபல இயக்குனர்

சமீபத்தில் வெளிவந்த தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தை பெரும்பாலானோர் வெகுவாக பாராட்டியும் ஒருசிலர் கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

பிரபல நடிகர் முன்பு 'தாமரை' பாட்டு பாடி ஓட்டு கேட்ட தமிழிசை

Actor Read more at: https://tamil.oneindia.com/news/tuticorin/actor-karthik-already-made-lotus-to-blossom-in-tamilnadu-say-bjp-chief-tamilisai-346013.html

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைகிறாரா நயன்தாரா?

மணிரத்னம் இயக்கத்தில் மல்டிஸ்டார்கள் நடிக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

திருமண கோலத்தில் அஜித்-வித்யாபாலன்: வைரலாகும் புகைப்படம்!

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித்துக்கு மனைவியாக நடிக்கும் வித்யாபாலன் கலந்து கொண்டார்.

பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகியாகும் மிஸ் இந்தியா வின்னர்

பிரசாந்த் நடித்த 'ஜீன்ஸ்' படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்தார் . தற்போது அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் மிஸ் இந்தியா வின்னர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.