தஞ்சை விவசாயிக்கு குவியும் திரையுலக உதவிகள்

  • IndiaGlitz, [Saturday,March 12 2016]

தஞ்சை விவசாயி பாலன் என்பவர் டிராக்டர் வாங்குவதற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல் போனதால் அவரை காவல்துறையினர் தாக்கியதாக வந்த தகவல் நேற்று பாராளுமன்றம் வரை எதிரொலித்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாலனின் கடனை அடைக்க நடிகர் விஷால் தனிப்பட்ட முறையில் உதவ தயார் என நேற்று அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்


இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் கருணாகரனும் பாலனுக்கு உதவியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் விவசாயி பாலனுக்கு ரூ.1 லட்சம் அளித்துள்ளதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் இந்த உதவி அவருக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இப்போதுள்ள இளையதலைமுறை நடிகர்கள் பொதுமக்களின் பொழுதுபோக்கு நட்சத்திரங்களாக மட்டுமின்றி இதுபோன்ற சமூக சேவையிலும் ஈடுபடுவது ஆரோக்கியமாக ஒன்றாக கருதப்படுகிறது.,