டுவிட்டரில் மகாத்மா காந்திக்கு புகழாரம் சூட்டிய கமல்

  • IndiaGlitz, [Monday,October 02 2017]

தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் 149வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மகாத்மாவின் சமாதிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்பட தலைவர்கள் இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் சென்னையில் பொறுப்பு கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

'முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின்னர் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள் பின்னர் உனக்கெதிராக போராடுவார்கள் பின்னர் நீ வெற்றி பெறுவாய்' என்ற காந்திஜியின் கூற்றை மேற்கொள் காட்டியுள்ள கமல், நம்மை வலுப்படுத்திக் கொள்ள காந்திஜியின் கொள்கைகள் அவசியம் என தெரிவித்துள்ளார்