22 நாட்கள் கொரோனா பாதிப்புக்கு பின் மீண்டு வந்தேன்: பிரபல தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,May 25 2021]

தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றனர் என்பதும் பெரும்பாலானோர் அதில் குணமாகினர் என்பதும் ஒரு சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ் திரைப்பட நடிகர் காளி வெங்கட் அவர்களுக்கும் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

இது குறித்து அவர் வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது: கொரோனா இரண்டாவது அலையில் நானும் பாதிக்கப்பட்டேன். எனக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 22 நாள் சிகிச்சைக்கு பின் குணமானேன். எனக்கு கொரோனா அறிகுறி அனைத்தும் இருந்தது. ஆக்சிஜன் லெவல் குறைந்து இருந்ததை அடுத்து நான் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்தேன். ஆனால் வழக்கம்போல் இடம் கிடைக்கவில்லை. இதனால் நண்பர் ஒருவர் டாக்டராக இருந்ததால் அவருடைய அறிவுறுத்தலின்படி நான் தனிமை படித்துக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தேன். அவர் கொடுத்த மருந்து மாத்திரைகள் அனைத்தும் சாப்பிட்டேன்.

இந்த கொரோனா அனுபவத்திலிருந்து நான் சொல்வது என்னவென்றால் கொரோனா வராமல் பாதுகாப்பது தான் முக்கியம். ஒருவேளை வந்துவிட்டால் பதட்டமடைய கூடாது என்பது அதைவிட ரொம்ப முக்கியம். என்னுடைய மன நிலை என்னவென்றால் கொரோனா வந்துவிட்டது, இதற்காக ரொம்ப புலம்ப வேண்டாம், மருத்துவர் கூறும் அறிவுரையை பின்பற்றுவோம், மருந்துகள் என்ன செய்யுமோ அதை செய்யட்டும் என்று முடிவு செய்துவிட்டேன். நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி தற்போது நான் முழுவதும் குணமாகி வந்து விட்டேன். எனவே கொரோனா வந்தவர்கள் முக்கியமாக பதட்டமடைய வேண்டாம் என்றும் மருத்துவர் கூறும் வழிமுறையை பின்பற்றுங்கள் என்பது தான் நான் கூறும் முக்கிய செய்தியாகும்’ என்று தெரிவித்தார்.,