உங்களுடைய வெறித்தனமான பக்தன் நான்: பிக்பாஸ் வீட்டில் ஜெயம் ரவி!

பிக்பாஸ் வீட்டிற்கு ஜெயம் ரவி விசிட் செய்யப் போகிறார் என்பதும் தனது ’பூமி’ படத்தின் புரமோஷன் காரணமாக அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளார் என்பதையும் நேற்று ஏற்கனவே நாம் பார்த்தோம்

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவியை பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதலில் கமல்ஹாசனை சந்தித்துவிட்டு அதன்பின்னர் அகம்டிவி மூலம் போட்டியாளர்களை சந்தித்துப் பேசும் ஜெயம் ரவி, ‘இந்த வின்னிங் டைம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இறுதி போட்டி நெருங்கிவிட்டது. அனைவரும் சூப்பராக விளையாடுகிறீர்கள், பயங்கரமாக இருக்கிறது, செம எண்டர்டெயினிங் ஆக இருக்கின்றது

உங்களுடைய உண்மையான திறமையை நீங்கள் எப்போதும் போல் காட்டினாலே போதும், உங்களை அங்கிருந்து தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் நாங்கள் வெளியில் இருந்து வேற மாதிரி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சின்சியராக விளையாடுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது’ என்று கூறினார்

அப்போது கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலரா பார்க்கிறீர்களா? என்று கேட்டபோது ’சார் நீங்கள் எது செய்தாலும் நான் பார்ப்பேன், ஏனெனில் நான் உங்களுடனே வெறித்தனமான பக்தன்’ என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரோமோ முடிவடைகிறது. கமல்ஹாசனுடன் பேசிக்கொண்டிருக்கும் ஜெயம்ரவி, பிக்பாஸ் வீட்டிற்கும் சென்று போட்டியாளர்களை நேரிலும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

'மாஸ்டர்' படத்தின் டைட்டில் இதுதான்: பாலிவுட்டில் வைரல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக தயாராகி விட்டது என்பதும் இந்த படம் சென்சாரில் 'யுஏ' சான்றிதழ் பெற்று உள்ள நிலையில் ரிலீஸ் தேதி

சல்யூட் வைத்த காவலர்களுக்கு கைக்குலுக்கள்… தல அஜித்தின் அல்டிமேட் வீடியோ!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நம்ம தல அஜித் தனக்கு சல்யூட் அடிக்கும் காவலர்களுக்கு  கை குலுக்குகிறார்.

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார் நடிப்பில் உருவாகிய 'லட்சுமி' என்ற திரைப்படம் கடந்த  தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாகியது என்பது அனைவரும் அறிந்ததே.

திருமணத்திற்கு பின்னர் புது பிசினஸை தொடங்கிய காஜல் அகர்வால்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

வெளியே வந்த அனிதாவின் முதல் பதிவு: என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அனிதா என்பது அனைவரும் அறிந்ததே. தனித்தன்மையுடனும், அர்ச்சனா, பாலாஜி ஆகிய இரண்டு குரூப்புகளில்