அண்டாவில் பிரியாணி செய்து ஆதரவற்றோருக்கு அளித்த 'அண்ணாச்சி' நடிகர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஏழை எளிய மக்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர் என்பதும், பல சமூக ஆர்வலர்கள் இணைந்து தங்களால் முடிந்த வரை ஏழைகளின் பசியைப் போக்கி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னையில் செயல்பட்டு வரும் இரண்டு அறக்கட்டளைகளுடன் நடிகர் இமான் அண்ணாச்சி இணைந்து, தானே பிரியாணி செய்து அதை ஏழை எளிய மக்களுக்கும், சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு வழங்கி வருகிறார்.

நடிகர் சந்தோஷ் உள்பட பலர் இருக்கும் இந்த அறக்கட்டளை குழுவினருடன் இணைந்து நடிகர் இமான் அண்ணாச்சி தானே பிரியாணியை கிண்டும் புகைப்படங்கள், அவை முதியோர்களுக்கு கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன. நடிகர் இமான் அண்ணாச்சி தன்னால் முடிந்த அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

More News

நிதியுதவி செய்த விஜய்க்கு நன்றி தெரிவித்த முதல்வர்: 

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் அரசுக்கு உதவும் வகையில் பணக்காரர்கள், தொழிலதிபர்கள்

உண்மையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொரோனாவை குணப்படுத்துகிறதா???  ஆய்வு முடிவு!!!

அமெரிக்க அதிபர்  டெனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இறக்குமதி செய்ததில் இருந்து உலகம் முழுக்க இந்த மருந்து பேசுபொருளாகவே மாறிவிட்டது.

உலகம் முழுவதும் இறைச்சி சந்தைகளுக்கு புதிய விதிமுறைகள்!!! WHO வலியுறுத்தல்!!!

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து உலக நாடுகள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

ஒரே ஒரு பாடலுக்காக கமலுடன் இணைந்த ஒட்டுமொத்த இசையுலகம்

கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மக்கள் படும் துன்பம், இந்த நேரத்தில் மனிதர்கள் சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய மனிதநேயம் ஆகியவை

பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட வெளிமாநில தொழிலாளர்களின் நன்றிக்கடன்!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட 54வது தொழிலாளர்கள் அந்த பள்ளிக்கு செய்த சேவையை பார்த்து அந்த பகுதி மக்கள்