close
Choose your channels

சென்னை மருத்துவமனையில் கொரோனாவுக்கு பலியான இளம் நடிகர்: ரசிகர்கள் அதிர்ச்சி

Monday, July 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மருத்துவமனையில் இளம் நடிகர் ஒருவர் கொரோனால் பலியாகியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் இந்தியா முழுவதும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது இளம் நடிகர் கிஷோர் தாஸ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக கவுஹாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்த நிலையில் உடலின் மற்ற பாதிப்புகளும் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த நடிகர் கிஷோர் தாஸ் உடலை அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்குமாறு அம்மாநில முதலமைச்சர் கேட்டுக்கொண்ட போதிலும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கொண்டு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கிஷோர் தாஸ் இறுதிச்சடங்குகள் சென்னையிலேயே நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்துள்ள கிஷோர் ஒரு சில அசாமி மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment