அன்னையர் தினத்தில் அப்பாவுக்கு வாழ்த்து.. அரசியலுக்கு வருவது உறுதி.. பிரபல நடிகர் மகளின் பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,May 14 2023]

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பலர் அன்னையர் தின வாழ்த்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரின் மகள் அன்னையர் தினத்தில் தனது தந்தைக்கு வாழ்த்து கூறிய பதிவு செய்ததோடு தான் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சத்யராஜ் என்பதும் இவரது மகள் திவ்யா நியூட்ரிஷன் ஆக உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அப்பாவை கட்டி பிடித்தபடியே புகைப்படத்தை பதிவு செய்து அதில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் திவ்யா. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

எல்கேஜி படிக்கும் போது இருந்து எனது நண்பராக சத்யா இருந்துள்ளார். என்னோட கிரஷ், பிம்பம், பிரச்சனைகள் அனைத்தும் அறிந்தவர் அவர்தான். எனக்கு நினைவு தெரிந்து அவரை நான் குழந்தையாகவே பார்த்துக் கொண்டிருக்கின்றேன். உலகின் சிறந்த மனிதனாக இந்த குழந்தை உள்ளது.

சில ஆண்டுகளாக எனக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு நாளும் நான் என் அப்பா முன் அழுதது கிடையாது. ஏனெனில் நான் அழுதால் என் அப்பாவும் என்னை பார்த்து அழுது விடுவார்.

எனக்கு பக்க பலமாக இதுவரை இருந்து வரும் அவருக்காக நான் எதையும் செய்வேன். நியூட்ரிஷனாக இதுவரை என் பணியை ஆற்றி உள்ள நிலையில் விரைவில் அரசியலில் ஈடுபட முடிவு செய்திருக்கிறேன். அரசியலில் இறங்கினாலும் எனக்கு என் குடும்பம் தான் முக்கியம். குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் என்ன வேண்டும் என்றாலும் நான் செய்வேன்.

வாழ்க்கை எனக்கு கடினமாக பாதையாக இருக்கும் போதெல்லாம் கட்டப்பாவுடன் ஒரு காபி குடித்தால் அனைத்து துன்பமும் விலகி உற்சாகமாகி விடுவேன். அரசியலில் குதிக்கப் போகும் எனக்கு என் அப்பா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எங்கள் வீட்டின் ராணி எங்கள் அம்மா தான். உலகிலேயே சிறந்த அம்மா அவர் தான் . அப்பா மற்றும் அம்மா இருவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்’ என திவ்யா சத்யராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.