'அஞ்சான்' படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் முதல் முறையாக இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா என்ற கொடிய வைரசுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தொடர்ச்சியாக பலியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இயக்குனர் தாமிரா மற்றும் இயக்குநர் கேவி ஆனந்த் ஆகியோர்கள் கொரோனாவுக்கு பலியானதால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’அஞ்சான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’அஞ்சான்’ படத்தில் போலீஸ் கமிஷனராக நடித்தவர் பிக்ரம்ஜித் கன்வர்பால் (Bikramjeet Kanwarpal)என்பவர்/ இவர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவருக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது,. பிக்ரம்ஜித் கன்வர்பால் கொரோனாவால் பலியானதை அடுத்து பாலிவுட் திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

More News

தடுப்பூசி எங்கடா டேய்? நடிகர் சித்தார்த்தின் ஆவேச டுவிட்!

நடிகர் சித்தார்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநில முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்த நிலையில் சித்தார்த்துக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக

பிரபல யூடியூபர்கள் ராம்-ஜானு திருமண நிச்சயதார்த்தம்: வைரல் வீடியோ

யூடியுப் மூலம் பிரபலமான ராம் மற்றும் ஜானு ஆகியோர் நீண்ட காலம் காதலித்து தற்போது தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ராம்-ஜானுவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில்

தமிழ் சினிமாவின் ஃபீனிக்ஸ் பறவை: தன்னம்பிக்கையால் உயர்ந்த தல அஜித்துக்கு வாழ்த்துக்கள்!

இன்று 50வது பிறந்த நாளை கொண்டாடும் தமிழ் சினிமாவின் ஃபீனிக்ஸ் பறவையான அஜித் இன்னும் பல ஆண்டுகள் தனது ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இல்லை… ஏன்?

இந்தியா முழுக்க கடந்த மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்காக ஆட்டோவை ஆம்புலஸ்ஸாக மாற்றிய நல்ல உள்ளம்!

கொரோனாவின் தீவிரத்தால் தற்போது படுக்கை தட்டுப்பாடு  மட்டுமல்ல, பல மாநிலங்களில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.