பிரபல தமிழ் நடிகர் இரட்டை குழந்தைகளின் 3வது பிறந்தநாள்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,August 09 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகளுக்கு இன்று மூன்றாவது பிறந்த நாளை அடுத்து அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் ’காதல்’ ’வெயில்’ ’கூடல்நகர்’ ’நேபாளி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பரத். தற்போது அவர் ஏழு திரைப்படங்களில் நடித்து பிசியாக நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜெஷ்லி என்பவரை பரத் திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளின் மூன்றாவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து நடிகர் பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள பரத் அதில், ‘எனது இரண்டு செல்லங்களுக்கும் இன்று 3வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 3 வருடங்கள் ஆகிவிட்டன, நீங்கள் இருவரும் தினமும் மேலும் மேலும் வளர்ந்து வருகிறீர்கள். என்னால் நம்பவே முடியவில்லை’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

கமல் பட நடிகை அணிந்த 58 கிலோ எடையுள்ள உடை: வைரல் வீடியோ

கமலஹாசன் நடித்த படம் ஒன்றில் நடித்த நடிகை ஒருவர் 58 கிலோ எடையுள்ள உடை அணிந்து உள்ள வீடியோ தற்போது அவரது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடந்ததால், டான் படக்குழு மீது வழக்குப்பதிவு....!

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சர் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்.....!

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று மாநிலத்தில் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார்

நடிகை வித்யுலேகா ராமனின் "பேச்சுலர் பார்ட்டி" போட்டோஸ்.....!

நடிகை வித்யுலேகா  ராமனின், சகோதரியான கீதாஞ்சலி செல்வராகவன் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்

அசுரன் - வெந்து தணிந்தது காடு படங்களுக்குள் என்ன சம்பந்தம்? எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் 'அசுரன்' படம் போன்று கிராமத்து கதையம்சம் கொண்டது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில்