கொரோனாவில் இருந்து மீண்ட தமிழ் ஹீரோவின் உருக்கமான வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Thursday,May 06 2021]

தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவர்களில் பலர் மீண்டு வருகிறார்கள் என்பதும் சிலர் பலியாகி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இன்று கூட கொரோனாவுக்கு பாடகர் கோமகன் மற்றும் நடிகர் பாண்டு ஆகியோர் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சி செய்திகளை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்ட தமிழ் ஹீரோ ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். இந்த நிலையில் தற்போது எனக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி

இந்த நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். வீட்டில் அனைவரும் கவனமாக இருங்கள், தேவைப்பட்டால் மட்டும் வெளியே செல்லுங்கள் என்று உருக்கமாக அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.