நடிகர் அருண்விஜய்க்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,January 05 2022]

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நடிகை மீனா உள்பட ஒரு சிலருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகர் அருண்விஜய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தான் மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அருண்விஜய் பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில் அருண் விஜய் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

நாளை முதல் திரையரங்குகள் மூடப்படுகிறதா?

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு நேர ஊரடங்கு என்றும் தமிழக அரசு சற்று முன் அறிவித்தது என்பதை பார்த்தோம்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

பணமோசடி வழக்கில் தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர

ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம்சிங்கம்… கொண்டாடும் ரசிகர்கள்!

இந்திய அணி ஜோகனஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது.

புது வரலாற்றுப் சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்!

ஐபோன், ஐபேட் போன்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தில் முதலிடம் வகித்துவரும் ஆப்பிள் நிறுவனம் உலகில் முதல் முறையாக