அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.. நடிகர் வேல ராமமூர்த்தி எச்சரிக்கை

  • IndiaGlitz, [Wednesday,November 23 2022]

நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தனது பெயரில் பண மோசடி செய்யப்பட்டு வருவதாகவும் அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் தனது சமூக வலைதளத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் வேல ராமமூர்த்தி என்பதும் இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி இவர் ’குற்றப்பரம்பரை’ உள்ளிட்ட பல நூல்களை எழுதிய பிரபலமான எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் வேல ராமமூர்த்தி பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு பணம் கேட்டு ஒருசிலர் ஏமாற்றி வருவதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை அடுத்து தனது சமூக வலைத்தளத்தில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது:

நண்பர்களே, உஷார்! என் பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் பணம் கேட்டு ஏமாற்றுவதாக அறிகிரேன். தயவு செய்து யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
 

More News

திருமணமாகி 25 ஆண்டுகள் கழித்து விவாகரத்தா? தமிழ் நடிகையின் கணவர் விளக்கம்!

தமிழ் திரையுலகில் கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகை சிவரஞ்சனி தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக ஒரு சில யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருவதை

அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன்.. செம புகைப்படம் வைரல்

நடிகர் அஜித்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த புகைப்படம் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சன் டிவி சீரியல் நடிகைக்கு ஆண் குழந்தை.. கணவர் வெளியிட்ட புகைப்படம்!

சன் டிவி சீரியலில் நடித்த நடிகை சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவர் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

இன்னும் ஒரிரு நாளில் ரஜினி-அஜித் சந்திப்பு? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

 இன்னும் ஒரு சில நாட்களில் ரஜினி - அஜித் சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கெளதம் கார்த்திக்கின் அம்மாவுக்கு இன்று ஸ்பெஷல் தினம்.. எப்படி வர்ணித்திருக்கிறார் பாருங்கள்..

நடிகர் கௌதம் கார்த்திக்கின் அம்மாவுக்கு இன்று பிறந்தநாளை அடுத்து அவர் பதிவு செய்திருக்கும் நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.