தனுசுக்கு டைரக்‌ஷன் மேல ஒரு வெறித்தனம் இருக்குது: பிரபல நடிகரின் பதிவு..!

  • IndiaGlitz, [Monday,December 25 2023]

தனுசுக்கு டைரக்‌ஷன் மேல ஒரு வெறித்தனமான அன்பு இருக்கிறது என்றும், அவரது இயக்கத்தில் உருவான ’D50’ படம் நிச்சயம் சர்வதேச அளவில் கவனத்தை பெறும் என்றும் பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த தனுஷ் ’பா பாண்டி’ என்ற படத்தை இயக்கினார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவான இரண்டாவது படமான திரைப்படமான ’D50’ படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா தனுஷின் இயக்கம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

‘தனுஷ் ஒரு சூப்பர் டைரக்டர், அவருக்கு டைரக்‌ஷன் மேல என்ன வெறி, என்ன அர்ப்பணிப்பு. அவர் வேற லெவல். ’D50’ படத்தின் கதை மற்றும் வித்தியாசமான காட்சி அமைப்பு ஆகியவை சர்வதேச தரத்துடன் இருக்கும். அதேபோல் அவருடைய அடுத்த படமான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படமும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

எஸ்ஜே சூர்யா அடிப்படையில் ஒரு நல்ல இயக்குனர் என்ற நிலையில் அவரே தனுஷின் டைரக்‌ஷன் குறித்து புகழ்ந்து பதிவு செய்திருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

விக்ரம் போகும்போது ஏன் அப்படி நடந்துகிட்டிங்க.. அர்ச்சனா கேள்விக்கு மாயாவின் ஆவேச பதில்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று விக்ரம் சரவணன் எலிமினேஷன் ஆனபோது மாயா நடந்துகொண்ட விதம் பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிக்பாஸ் கூட மாயாவை அழைத்து இனிமேல்

எனக்கு தடை நீங்க தான்.. நான் செஞ்சது புல்லின்னா நீங்க செஞ்சதும் அதுதான்: பிக்பாஸை குறை சொன்ன போட்டியாளர்..!

பிக் பாஸ் தான் எனக்கு தடையானவர், நான் மற்றவர்களுக்கு செஞ்சது புல்லி என்றால் நீங்கள் எனக்கு செய்தது புல்லி என போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் மீது குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகைச்சுவை நடிகர் பெற்ற மூன்றாவது இளங்கலை பட்டம்: ரசிகர்கள் வாழ்த்து..!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் முத்துக்காளை தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே 3.21 மணி நேர ரன்னிங் டைம்.. ஓடிடியில் இன்னும் அதிகம் என அறிவிப்பு.. எந்த படம்?

 திரையரங்குகளில் வெளியாகும் போது 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ரன்னிங் டைமாக இருந்த படம் ஓடிடியில் இன்னும் அதிக நேரம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரவிந்த்சாமிக்கு மட்டும் தானா, எனக்கும் மரியாதை தர வேண்டும்.. ரசிகரின் பதிவுக்கு மோகன்ராஜா பதில்..!

 தமிழ் திரையுலகின் புத்திசாலித்தனமான வில்லன் கேரக்டர் 'தனி ஒருவன்' படத்தில் நடித்த அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யு  கேரக்டர் என்று ரசிகர் ஒருவர் செய்த பதிவுக்கு அந்த கேரக்டரை