சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல மாடல் அழகி கைது

  • IndiaGlitz, [Tuesday,November 27 2018]

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை தவறாக புரிந்து கொண்ட ஒருசில பெண்கள் விரதம் இருக்காமல், இருமுடியில் ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவற்றை கட்டி கோவிலுக்கு எடுத்து சென்றனர். அவர்களில் ஒருவர் பிரபல மாடல் அழகி ரெஹானா பாத்திமா

இவர் சபரிமலையில் உள்ள சன்னிதியை நெருங்கிய போது ஐயப்ப பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். மேலும் ரெஹானாவையும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்தது

இந்த நிலையில் இதுகுறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ரெஹானா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்ததை அடுத்து அவர் மீது மத உணர்வுகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலான பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபரிமலை ஆச்சார சம்ரக்‌ஷனா சமிதி அமைப்பின் செயலாளர் பத்மகுமார் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் இந்திய கிரிமினல் சட்டம் 153A-வின் கீழ் ரெஹானா மீது வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் இன்று கைது செய்துள்ளனர். முன்னதாக ரெஹாவின் முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சர்கார்' இடத்தை பிடிக்க 'பேட்ட' முயற்சியா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை பிடிக்க தளபதி விஜய் நெருங்கிவிட்டார் என்பது தெரிந்ததே. ஆனால் விஜய்யின் 'சர்கார்' இடத்தை ரஜினியின் 'பேட்ட' பிடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அமலாபாலுடன் திருமணமா? விஷ்ணுவிஷால் விளக்கம்

சமீபத்தில் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால், நடிகை அமலாபாலை திருமணம் செய்யவிருப்பதாக கோலிவுட்டில் வதந்தி பரவியது. இதுகுறித்து ஒருசில இணையதளங்களில் செய்தியும் வெளியானது

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.2 கோடி கொடுத்த பிரபல நிறுவனம்

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பிற்கு திரையுலகினர் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அதிகபட்சமாக லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி கஜா நிவாரண நிதியாக அளித்தது.

நயன்தாரா பட இயக்குனருக்கு ஏற்பட்ட சோகம்: சிம்பு இரங்கல்

நயன்தாரா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சனின் தந்தை நேற்று சென்னையில் காலமானார்.

எமிஜாக்சனின் டூப் இல்லாத ஆக்சன் காட்சி: வைரலாகும் '2.0' வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் உச்சக்கட்டத்தில் உள்ளது.